இணையம் தந்த இன்னுயிர் சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த சகோதரிகள் தின நல்வாழ்த்துகள்!அன்புடன்
சுவாதி
மனதின் சலனமற்ற பக்கங்களில் எண்ணங்களின் சாரல் துளிகள் வந்து தேங்கிய போதெல்லாம் என் பேனாவில் அதை மையாக நிரப்பிக் காகிதங்களில் தெளித்த தருணங்களில் சிந்திய மைத்துளிகள் இவை...!!
இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் குழுமத்தின் உறுப்பினரான நலம் பெறுக ஐயா தான். ஆண்மகனுக்கோர் கவிதை என்ற இழையில் எனக்கும் பாஸ்கர் என்ற பதிவருக்குமிடையில் உருவாகவிருந்த ஒரு கடுமையான பெண்ணியம் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்த நலாம் பெறுக ஐயா நாசுக்காக மேற்கொண்ட சமாதான முயற்சியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. பாஸ்கரை மகனாகவோ தம்பியாகவோ நினைத்து தாலாட்டு எழுதச் சொல்லி வேண்டுகோள் முன் வைத்துவிட்டார். :):) முரண்பாடான கருத்துகளுடன் முட்டி மோதத் தொடங்கிய இருவருக்குள் இப்படி ஒரு பந்தத்தை கற்பனை செய்யச் சொன்னதில் மூண்டெழுந்த ஆத்திரத்தையும், ஊற்றெடுத்த கருத்துகளையும் அப்படியே அமுக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது. என்னடா இது என்று தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டேன். திசை திரூப்பப்பட்டாலும் எனக்கு இந்த தாலாட்டு எழுதும் விசயம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த தாலாட்டு எழுதும் முயற்சியை குழுமத்தில் தொடக்கலாம் என்று இருக்கிறேன். அதன் முயற்சியில் பாஸ்கரை தம்பி பாப்பாவாக பாவித்து எழுதிய தாலாட்டு இது...... :):)
ஆராரோ ஆரிரரோ அருமைத் தம்பி கண்ணுறங்கு!
ஊருறங்கும் நேரமிது ஓவென்று நீரழலாமோ?
பாலுண்டீர், பழமுண்டீர்; பசியாறித் தூங்காமல்
ஏனழுதீர் எந்தம்பி? எதைக் கண்டு நீர் அருண்டீர்?
(ஆராரோ ஆரீரரோ)
கண்ணாடி முன்னின்றீரோ?கருமை முகம் தான் கண்டீரோ?
கண்ணுறங்க முடியாமல் கவலையினால் நீரழுதீரோ?
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ கன்னிமயில்கள் தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
(ஆராரோ ஆரீரரோ)
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ காதலிக்க தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
காக்கும் கடவுளும் கறுப்புதாண்டா..கண்மனியே கண்ணுறங்கு!
சூப்பர் ஸ்டாரும் கறுப்புதாண்டா; சுந்தரனே கண்ணுறங்கு!
(ஆராரோ ஆரீரரோ)
விரசாய் வளரணுமே வரவாய் உழைக்கணுமே
நிறைவாய் நகை நட்டு நீர் பூட்டனுமே அக்கைக்கு
பெரிசாய் பயந்தனையோ பேயலறல் அழுதனையோ
தரிசாய் போகுமென்று தங்கமே கலங்கினையோ?
(ஆராரோ ஆரீரரோ)
கடல் கடந்து போகணுமே காசு பணம் சேர்க்கணுமே
முழுசாக இளமையெல்லாம் விழலாக போகணுமோ
என்றுணர்ந்தா நீரழுதீர் என் தம்பி சொல்லியழும்
நன்றாக வாழ்கை வரும் கண்ணுறங்கு கண்மணியே!
(ஆராரோ ஆரீரரோ)
பெண் சோதரம் உடன் பிறப்பாய் பிறந்திட்ட விதி நினைந்து
வெஞ்சினமாய் வெகுண்டீரோ வெந்நீராய் விழி திறந்தீரோ?
கண்ணீரை துடையுமய்யா; கவலை தனை தவிருமைய்யா- அக்கா
கூடவர மாமனிருக்கார்; காதல் மட்டும் போதுமென்பார்
(ஆராரோ ஆரீரரோ)
அன்புடன் நண்பர்களுக்கு!
வணக்கம்!
ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்
பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.
இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.
தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின்
வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும
உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.
வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை
பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.
போட்டிகளின் விபரங்கள் வருமாறு:
இலக்கியப் போட்டிகள்
சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:
ரூபாயும் வழங்கப்படும்.
சிறுகதை:
கட்டுரை:
கவிதை:
கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
1. மரபுக் கவிதை.
2. புதுக்கவிதை
ஒவ்வொரு பிரிவிலும்
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து
கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக்
குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து
இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு
சமர்பிக்கப்படும்.
எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் *Thamizmakal@gmail.com *என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.
இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக
முக்கியம்.