நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!
அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!
அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!
நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!
எழுத்தாளர் செங்கை ஆழியான் புதல்வி, கவிதாயினி Dr. ரேணுகா பிரதீப்குமார்
குணராசா விண்ணேகினார்
-
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், என் எழுத்துலக ஆசான் செங்கை ஆழியான் (க.குணராசா)
அவர்களின் மூத்த புதல்வி Dr. ரேணுகா பிரதீப்குமார் அவர்களின் பிரிவுச் செய்தி
அறி...
2 days ago







