நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!
அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!
அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!
நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!
ஈழத்தின் பிரபல வயலின் மேதை “சுருதி வேந்தன்" அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள்
விண்ணேகினார் 🙏
-
ஜெயராமன், அம்பலவாணர் (பிறப்பு 29.08.1959 ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச்
சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் யாழ்ப்பாணம்
கலட்டி மெத...
2 weeks ago