ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?
என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!
பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..
மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!
கவிஞர் அம்பி விண்ணேகினார் 🙏
-
ஈழத்தின் மூத்த படைப்பாளி அம்பி ஐயா சிட்னியில் தனது 95 வது வயதில் மீள
உறக்கத்துக்குச் சென்று விட்டார்.
ஈழத்தில் நாம் படித்த காலத்தில் பாப்பா பாடல்கள் வழி...
4 days ago
No comments:
Post a Comment