நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!
அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!
அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!
நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!
இவர்கள் மகாத்மாக்கள் வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
-
இவர்கள் மகாத்மாக்கள்
வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
மனித வாழ்வில் உயர் நெறிகளைக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டிகளாகத் திகழ்ந்த பல
மகாத்மாக்களை ந...
2 weeks ago








No comments:
Post a Comment