நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!
அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!
அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!
நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!
கவிஞர் அம்பி விண்ணேகினார் 🙏
-
ஈழத்தின் மூத்த படைப்பாளி அம்பி ஐயா சிட்னியில் தனது 95 வது வயதில் மீள
உறக்கத்துக்குச் சென்று விட்டார்.
ஈழத்தில் நாம் படித்த காலத்தில் பாப்பா பாடல்கள் வழி...
4 days ago
No comments:
Post a Comment