எத்தனை உயிர்கள்? எத்தனை உறவுகள்?
காவு கொண்ட நாளது..
எத்தனை காலம் போனாலும்
மாறாத ரணமது ,
அலைகளெல்லாம் ஆழியாகி அழிக்க வல்லது
இயற்கை அன்னையின்
ஊழித் தாண்டவத்தின் உச்சம் கொடியது..
விழுங்குவது தன் மக்களுயிர் என்று
விளங்கிய படியே அன்னை பசியாறிய நாளது..
கால தேவன் நாளேட்டில்
கடற்கரையின் கறைகள் தீட்டிய கோரம்!
கடல் கலந்த அலைகளை மறைத்த
பிணக்குவியல்களின் பாரம்!
கொள்ளி போட நாதியின்றி..
கோடித் துணி போர்த்த ஆளின்றி
அள்ளி எடுத்து குப்பையாய்
ஆங்கோர் தீவின் ஓரத்தில்
எரிந்த சாம்பல் மேடுகளில்
என்பு பொறுக்க்கி , ஈமை செய்ய
எவரும் இங்கில்லாமல்
பொங்கிய புனல் வந்து
அனல் கொண்டு குவித்த நாளது..!
இவர்கள் மகாத்மாக்கள் வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
-
இவர்கள் மகாத்மாக்கள்
வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
மனித வாழ்வில் உயர் நெறிகளைக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டிகளாகத் திகழ்ந்த பல
மகாத்மாக்களை ந...
2 weeks ago








1 comment:
Well written article.
Post a Comment