Wednesday, August 15, 2007

கவிக்கு பதில்...






கவிஞர் வைரமுத்து தன்னுடைய வைரமுத்து கவிதைகள் தொகுப்பில் வழிப்போக்கன் வார்த்தைகள் என்ற தலைப்பில் இனப் போராட்டத்தில் இலங்கை எரிந்து கொண்டிருந்த வேளையில் இன்னொரு விமான இடைவெளியில் கொஞ்ச நேரம் கொழும்பில் தங்க நேர்ந்த போது 1989ஆம் ஆண்டில் எங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்...அதை வாசிக்க நேர்ந்த போது அவருக்கு பதில் எழுதி அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. அவருடைய கவிதையும் அந்தக் கவிதைக்கும் அவருக்கும் நான் எழுதிய பதில் கவிதையும் இங்கே ............

கவிஞர் வைரமுத்து:


உங்கள் பட்சிகள் எங்கே
காடுகளே
உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே
தேயிலைக் கொழுந்து
கிள்ளியவள் சந்ததி
தேயிலைக் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?
இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத் தான் பொழிகிறதுமழை.
நனையத் தான் ஆளில்லை
இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன மலர்கள்
பறிக்கத் தான் ஆளில்லை.
எங்கே?
இந்த மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள் எங்கே?
சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்....
உடல்கள்...உடல்கள்
வெறும் உடல்கல்
ஈழத் தோழா
உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
இன்று
தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந் நாடே
காதலியோடு
கைவிஅரல் கோத்துக்
கலந்ததும் இந் நாடே
இன்று
காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந் நாடே
சின்ன வயதில்
சடு குடு விளையாடக்
கிழித்த கோடாஅய்
தடயங்கள் இல்லாத
குடும்பங்கள் ஆயிரம்
ஒரு விதவையின்
முதலிரவு நினைவுகளாய்
துரத்தப்பட்டவரின்
மண்வாசனை ஞாபகங்கள்
அழகான தீவு இது
உலகப் படத்தில் ஒரு
தேன் கூடு
இப்போது
வண்டுகள் பூக்களில்
கண்ணீர் எடுக்கின்றன
இப்போதும்
அருவி விழுகிறது
ஆலோலம் இல்லாமல்

இப்போதும்
குயில் கூவுகிறது
நாக்கைக் கழற்றி வத்துவிட்டு
பிணங்களுக்காகத் தான்
சுடு காடு தயாரிக்கப்பட்டது
இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த ரத்தப் பெருக்கின்
நதி மூலம் எது?
முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?
முதலில் விழுந்தது
எவர் பிணம்?
இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பிவிடுங்கள்
இப்போது தேவை
காயத்திற்கு மருந்து
இப்போது தேவை
தாகத்திற்கு நீர்
இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்
இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை.




எனது பதில்:

காடுகளோடு களனிகளும்
கனன்று சாம்பரான மேட்டில்
நின்று
கழுகுகளைப் பார்த்து
பட்சிகளாகப் பட்டியலிடலாமோ?

நிஜமான பட்சிகளின் சமாதிகளுகருகிலல்லவா
நீ
நின்று கொண்டிருக்கிறாய்
வழிப்போக்கா?!

எங்கள் பட்சிகள்
தூர தேசத்தில் அகதிகளாகவும்
தமிழீழத்தில் அனாதை பிணங்களாகவும்
எரிந்து கொண்டிருந்த வினாடிகளில்
நீ
விமானநிலையக் குளு குளு அறையிலிருந்து
பிடிலல்லவா வாசித்திருக்கிறாய்?

ம்ம்ம்ம்ம்...

தேயிலைக் கொழுந்துகளோடு
தம் உணர்வுகளையும்
சேர்த்துக் கிள்ளி
காயவைத்து, அரைத்துவிட்ட
சந்ததியையும்,
தேசத்தை ஆண்ட
ஈழத் தமிழன் சந்ததியையும்
சேர்த்துத் தான்
இங்கு
தீண்டப்படாதவராய் தீர்த்துக்கட்டப்படுகின்றனர்...

இங்கே
மேகங்களின் மெல்லிசையாலா
மழை பொழிவதாய் நினைத்தாய்?
இல்லை....
தோராயமாக கால் நூற்றாண்டாக
என் தமிழ் தாய்
வெடி முழக்கங்களில் சாம்பராகும்
தன் சந்ததிக்காய்
வடிக்கும் கண்ணீர் அது!

வேண்டுமானால் ...
சுவைத்துப் பார்....
உப்புக் கரிக்கும்!


இன்னும், இன்றும்...
ஏதாவது கிளைகளில்
சில பூக்களாவது பூக்கத் தான் வேண்டும்..
ஏனெனில்
எங்கள் மாவீரரின் சமாதிகளுக்கு
அர்ச்சிக்க அவை தேவை
எமக்கு!

எங்கள் மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள்
இங்கே தான்
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்..

அமிலத் தீயில் எரிந்து
சாம்பராகி
இதே மண்ணில் தான்
உக்கி உரமாகியிருக்கிறார்கள்!


எந்தையும் தாயும் குலவியிருந்த
என் நாட்டில்
பக்கத்து நாட்டான்
என் தாயின் துகிலுரிந்த போது
நீ யாருக்குத் உங்கள் பட்சிகள் எங்கே
காடுகளே
உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே
தேயிலைக் கொழுந்து
கிள்ளியவள் சந்ததி
தேயிலைக் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?
இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத் தான் பொழிகிறதுமழை.
நனையத் தான் ஆளில்லை
இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன மலர்கள்
பறிக்கத் தான் ஆளில்லை.
எங்கே?
இந்த மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள் எங்கே?
சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்....
உடல்கள்...உடல்கள்
வெறும் உடல்கல்
ஈழத் தோழா
உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
இன்று
தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந் நாடே
காதலியோடு
கைவிஅரல் கோத்துக்
கலந்ததும் இந் நாடே
இன்று
காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந் நாடே
சின்ன வயதில்
சடு குடு விளையாடக்
கிழித்த கோடாஅய்
தடயங்கள் இல்லாத
குடும்பங்கள் ஆயிரம்
ஒரு விதவையின்
முதலிரவு நினைவுகளாய்
துரத்தப்பட்டவரின்
மண்வாசனை ஞாபகங்கள்
அழகான தீவு இது
உலகப் படத்தில் ஒரு
தேன் கூடு
இப்போது
வண்டுகள் பூக்களில்
கண்ணீர் எடுக்கின்றன
இப்போதும்
அருவி விழுகிறது
ஆலோலம் இல்லாமல்

இப்போதும்
குயில் கூவுகிறது
நாக்கைக் கழற்றி வத்துவிட்டு
பிணங்களுக்காகத் தான்
சுடு காடு தயாரிக்கப்பட்டது
இங்குதான்
சுடுகாட்டுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த ரத்தப் பெருக்கின்
நதி மூலம் எது?
முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?
முதலில் விழுந்தது
எவர் பிணம்?
இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பிவிடுங்கள்
இப்போது தேவை
காயத்திற்கு மருந்து
இப்போது தேவை
தாகத்திற்கு நீர்
இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்
இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை.


எனது பதில்:

காடுகளோடு களனிகளும்
கனன்று சாம்பரான மேட்டில்
நின்று
கழுகுகளைப் பார்த்து
பட்சிகளாகப் பட்டியலிடலாமோ?

நிஜமான பட்சிகளின் சமாதிகளுகருகிலல்லவா
நீ
நின்று கொண்டிருக்கிறாய்
வழிப்போக்கா?!

எங்கள் பட்சிகள்
தூர தேசத்தில் அகதிகளாகவும்
தமிழீழத்தில் அனாதை பிணங்களாகவும்
எரிந்து கொண்டிருந்த வினாடிகளில்
நீ
விமானநிலையக் குளு குளு அறையிலிருந்து
பிடிலல்லவா வாசித்திருக்கிறாய்?

ம்ம்ம்ம்ம்...

தேயிலைக் கொழுந்துகளோடு
தம் உணர்வுகளையும்
சேர்த்துக் கிள்ளி
காயவைத்து, அரைத்துவிட்ட
சந்ததியையும்,
தேசத்தை ஆண்ட
ஈழத் தமிழன் சந்ததியையும்
சேர்த்துத் தான்
இங்கு
தீண்டப்படாதவராய் தீர்த்துக்கட்டப்படுகின்றனர்...

இங்கே
மேகங்களின் மெல்லிசையாலா
மழை பொழிவதாய் நினைத்தாய்?
இல்லை....
தோராயமாக கால் நூற்றாண்டாக
என் தமிழ் தாய்
வெடி முழக்கங்களில் சாம்பராகும்
தன் சந்ததிக்காய்
வடிக்கும் கண்ணீர் அது!

வேண்டுமானால் ...
சுவைத்துப் பார்....
உப்புக் கரிக்கும்!


இன்னும், இன்றும்...
ஏதாவது கிளைகளில்
சில பூக்களாவது பூக்கத் தான் வேண்டும்..
ஏனெனில்
எங்கள் மாவீரரின் சமாதிகளுக்கு
அர்ச்சிக்க அவை தேவை
எமக்கு!

எங்கள் மண்ணின்
பூர்வீகப் புத்திரர்கள்
இங்கே தான்
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்..

அமிலத் தீயில் எரிந்து
சாம்பராகி
இதே மண்ணில் தான்
உக்கி உரமாகியிருக்கிறார்கள்!


எந்தையும் தாயும் குலவியிருந்த
என் நாட்டில்
பக்கத்து நாட்டான்
என் தாயின் துகிலுரிந்த போது
நீ யாருக்குத்
தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தாய்?

சின்ன வயது நினைவுகளோடு
கழிந்துவிட்டால்
இனிவரும்
எம் சந்ததிக்கு சின்னவயதுப் பிராயமே
தேறாது
என்பதால் தான்
நினைவுகளைத் துரத்திவிட்டு
இலட்சியங்களை நோக்கி
நடை போடுகின்றோம்.

எங்களுக்கு
மறந்தவை பாதி;
மரத்துப் போனவை மீதி!


எங்கள் விதவைகள்
தங்கள் வெள்ளை சேலைகளை
எம் எதிரிகளுக்கு
சமாதானக் கொடிகளாகக் காட்டும் பணிக்கு
தந்துவிடவில்லை;
அவர்களின்
செவ் வண்ண நிறக் கூறைப் புடவைகளின்
சாயங்களை வெளுக்க வைத்த
ஈனர்களின்
செந்நீர் தோய்த்து வர
தந்திருக்கிறார்கள்...
தங்கள் கூந்தலில் பூசி முடிக்க!


மயானங்களைக் கூட அழகாக
வைத்திருந்தவர்கள் தான் நாம்;
ஆனால் இங்கு...
இப்போது
அழகே மயானத்தில் பிணமாகிவிட்டது!


இந்தத் தேன்கூட்டில்
இப்போது தேங்கியிருப்பது
தேன்னல்ல...
எம் சோதரர்களின்
சிதைந்து போன சதை துண்டங்களும் என்பும்
உக்கி ஊறிய
உதிரக் குளம்பும் தான்..!


தயவு செய்து
கேள்வியை மாற்றிக் கேள்...!
முதலில் பிணமானது யார்
என்று!
சரித்திரமே சொல்லும்
தமிழ் பிணம் என்று..!
அதுவும் கூறு கூறுகளாய் சீவி
ஊறுகாய்க்குப் போட்ட
தேசிக்காய் பழத் துண்டங்களாய்....


பின்னால் தான்
துருப் பிடித்த துப்பாக்கிக்களை
வெடிக்கப் பழகிக் கொண்டோம்...


உன் கேள்விகளுக்கு
எதற்கு
விஷேஷமான ஆய்வு கூடம்?
கால் நூற்றண்டுக்கும் மேலாக
இங்கிருக்கும்
தமிழனின்
சரித்திர வரலாற்று ஏடுகளை
வாசிக்காமல் கரையான் புற்றினுள்ளா
புதைத்துவிட்டாய்?


நாங்கள்
எங்கள் காயங்களை மருந்திட்டு
மாற்ற , மறைக்க விரும்பவில்லை;
வெந்து போன புண்களை
புரையேற்றி வைத்தோம்,
ஏனெனில்
வேதனைகளையும், வலிகளையும்
மறக்க விரும்பவில்லை
நாம்!
எங்கள் இழப்புகளின் கோரம்
ஈழம் வரும் வரை
இருக்க வேண்டும்
எப்போதும்..சுரணைகள் தகிப்புடன்..

எமது தாகம்
சமாதனப் பேச்சுகளில்
ஒத்திகை பார்க்க வரும்
சம்மந்தமில்லாத அயல் நாட்டவருக்கு
பகிரப் படும்
சாரயங்களால் தீர்ந்துவிடுவதில்லை;

இங்கே...
இந்த சமாதிகளுக்குள் தூங்கிவிட்ட
சோதரர்களின் கண்களுக்குள்
இன்னமும் விழித்திருக்கும்
தனி ஈழக் கனவு...
நனவானால் மட்டுமே அடங்கக்கூடியது!

எங்கள் தோள்கள்
வலிமையானவை;
தோள் கொடுக்கிறோமென்று
திரண்டு வந்து
முதுகில் குற்றாமல் இருந்தாலே
போதும்;


வழிப் போக்கனே!
உன் ஆதங்கம் புரிகிறது!
ஆனால்
எமது உரிமையும் சுதந்திரமும்
அதை விட உயர்ந்தது!
அரசியல்வாதிகளிடம்
குடமும் , சேலையும் வாங்கிவிட்டு
(வாக்கு)உரிமையில்
கருமை பூசுபவர்களல்ல நாம்!

எங்கள்
தாயின் மானம் காக்க
கொடிச்சீலை திரிப்பதில்
தீவிரமானவர்கள் நாங்கள்!


நீ
வழியில் வந்துவிட்டுப் போகிறவன்;
திரும்ப
வருவாயோ மாட்டாயோ..
நாங்கள்
இங்கேயே வாழ வேண்டுமென்ற
தவமிருப்பவர்கள்...
எங்களுக்குத் தேவை
பலமான அஸ்திவாரங்களுடனான
நிலையான உரிமை தேசம்;
சுற்றுலாக் கூடமல்ல..!


சுதந்திரத்திற்கான விடுதலைப் போரில்
வீறு கொண்ட
தேசத்தின் சந்ததியைப் பார்த்து
துயின்று பார்;
கனவுகள் இனிக்குமென்கிறாய்
நீ!


ஆனால் இவர்கள்
கனவுகளைத் துரத்திவிட்டு
காவலுக்காய்
விழிகளைத் திறந்து வைத்திருப்பவர்கள்..!


இன்னொரு தடவை
சிந்தித்து விட்டு
ஏதாவது
தீரமாய், வீரமாய்..விவேகமாய்
ஒரு வார்த்தை சொல்
எங்கள் வீறுகள்
மேலும் முறுக்கேற...

அல்லாமல்
எமக்காக வீணாக விசும்பாதே
பேதையாய்...
எம் தேசத்தின்
பேடைகள் கூட
பெண் வேங்கைகளாக மாறிய
இத் தருணத்தில்......

சுதந்திரத்திற்கான தவமொன்றில்
இங்கு மரணித்தல் வரம்!
மண் சுமந்த மேனிகளை
இன்று
மண் சுமக்கிறது.
நிதானிக்கிற நேரங்கள் கூட
எதிரிகளுக்கு அவகாசம்,
ஒரு வகையில்....
இடைவேளைகள் வைக்காமல்
தொடர்கின்ற போராட்டங்கள்
தொடக்கி வைக்கின்ற முனைப்புகளி நிறத்து
உணர்வுகள் சுண்டிவிட்ட
எலும்புக் கூடுகளில் உயிர்கள் வைத்து,
எழுந்து நிற்கிறது,
எந்நேரமும்,
எதற்காகவும்
தயாராகி....வரிசை....
எங்கள் எல்லைகள் நிரப்பி.!!

No comments: